முதல் முயற்சி மண்புழு உரம்
முதல் முயற்சி மண்புழு உரம் தயாரிக்க இணையத்தில் படித்ததை வைத்து கொண்டு ஆரம்பித்தேன் .மண்புழு என்றால் நம்ம வீட்டுல பாத்திரம் துலக்கும் இடத்தில இருக்கும் அதை பிடித்து போடவேண்டியது தானே . வெட்டி பார்த்தால் மண்புழு அவளவாக இல்லை காரணம் .பாத்திரம் விளக்க சோப்பு பயன் படுத்துவதால் என் நண்பரின் அம்மா சோப்பு பயன் படுத்துவது இல்லை அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்கள் பாத்திரம் துலக்கும் இடத்தில் 2 மணி நேரம் செலவு செய்து மன்புழுகளை சேகரித்து கொண்டு வந்தேன் . முன்பே ஒரு தொட்டி போன்று அமைத்து வைத்து அதில் மாட்டு சாணி மற்றும் நன்கு மக்கிய காய்கறி கழிவு போட்டு வைத்து இருந்தேன் .அதில் மண்புழுக்களை விட்டு விட்டு தினமும் தண்ணீர் தெளித்து வந்தேன் .ஒரு வாரம் ஆகியும் மண்புழு உரம் என் கண்ணில் தென்படவில்லை .அப்புறம் விசாரித்து பார்த்தால் நம்ம புழு இந்த வேளைக்கு ஆகாது ஆப்பிரிக்கன் மண்புழு தான் வேண்டும் . முதல் முயற்சி தோல்வி அடைந்தது .
இரண்டாவது முயற்சி மண்புழு உரம் .
பக்கத்து ஊரில் ஒரு நண்பர் மண்புழு தருவதாக சொன்னார் . நாளைக்கு வாங்க என்று சொல்வார் போன் செய்தால் நான் வெளிய இருக்கேன்நாளைக்கு வாங்க என்பார் அது ஆகாது என்று விட்டு விட்டு மண்புழு உரம் வாங்க முயற்சி செய்து 20 கிலோ மீட்டர் தூரம் சென்று ஒரு நண்பரிடம் மண்புழு உரம் வாங்கினேன் .அவரிடம் மண்புழு கேட்டேன் அவரும் ரொம்ப யோசிச்சி 2 நாட்கள் போகட்டும் என்றார் அவரிடம் இயற்கை விவசாயம் பற்றி பேசி கொண்டு இருந்தேன் .நான் உரத்தை வாங்கி கொண்டு வந்து விட்டேன் .அவராக போன் செய்து நீங்கள் சின்ன வயதில் ரொம்ப ஆர்வமாக இருகிங்க இயற்கை விவசாயத்தின் மீது இது வரை யாருக்கும் நான் மண்புழு குடுத்துது இல்லை என்று சொல்லிவிட்டு .நாளைக்கு வாங்க தருகிறேன் என்றார் . தொட்டி இல் அந்த மண்புழு இருப்பதால் இதற்கு தனியாக ஒரு பெட் அமைத்தேன் என்னிடம் பிளாஸ்டிக் ஷீட் 6 x 3 அளவில் இருந்தது அதை கீழே போட்டு அதன் மேலே தேங்காய் உரித்த மட்டை அடுக்கி அதன் மீது 2 இன்ச் அளவிற்கு மாட்டு சாணத்தை நன்கு உதிர்த்து விட்டு தண்ணீர் தெளித்து விட்டு மண்புழு வாங்க சென்றேன் .மண்புழு வாங்கி வந்து பெட்டில் போட்டு விட்டு அதன் மீது 4 இன்ச் அளவிற்கு மாட்டு சாணத்தை உதிர்த்து விட்டேன் .ஒரு வாரத்திலேயே மண்புழு உரம் மேல படிய ஆரம்பித்து விட்டது .
எறும்பு தொல்லை இருந்தது வேப்பம் புண்ணாக்கு பெட்டை சுற்றி துவுனேன் .மண்புழுவை எறும்பு ஒன்றும் செய்ய இயலாதாம் மண்புழு சுறுசுறுப்பாக இருப்பதால் .மண்புழு பெட் அமைக்கும் போது கவனிக்க வேண்டியவை . தண்ணீர் தேங்கத இடமாக இருக்க வேண்டும். தவளை, ஓணான் ,எலி இவைகள் மண்புழு பெட்டிற்கு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் . நிழலான இடமாக இருக்க வேண்டும் . அதே நேரத்தில் காற்றொட்டமான இடமாக இருக்கவேண்டும் .தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும் .இரண்டாவது முயற்சி வெற்றி அடைந்து உள்ளது.
-- வசந்த் .ஐயப்பன் .
No comments:
Post a Comment